நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் தொழிலாளி பலி
8 Apr 2026, 5:30 am
<p><strong>நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் தொழிலாளி பலி</strong></p><p>புதுக்கோட்டை, ஏப். 7- புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் ஒருவர் பலியானார். புதுக்கோட்டை அருகே, நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது.</p><p>திங்கட்கிழமை தேரோட்டம் நடந்த நிலையில், தேரை பக்தர்கள் இழுத்த போது சங்கிலி அறுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அறுந்த சங்கிலியை இணையாக தூக்கிப்பிடித்தபடி சேர்ந்த தேருக்கு கட்டை போடும் தொழிலாளி மணிவண்ணன் (45) என்பவர், சம்பந்தப்பட்ட எடுத்து சங்கிலியில் அடிபட்டுள்ளார்.</p><p>அப்போது நிலைதடுமாறி தேரில் மோதியுள்ளார். அப்போது தேரில் இருந்த ஆணி அவர் தலையில் குத்தியதில் மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் மணிவண்ணனை மீட்டு சிகிச்சைக்காக நார்த்தாமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.</p><p>அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணிவண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். இதனையடுத்து கீரனூர் காவல்துறையினர் மணிவண்ணன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p>
