நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் தொழிலாளி பலி
8 Apr 2026, 5:30 am
<p><strong>நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் தொழிலாளி பலி</strong></p><p>புதுக்கோட்டை, ஏப். 7- புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் ஒருவர் பலியானார். பங்குனி திருவிழா தேரோட்டத்தின் போது இந்த விபத்து நிகழ்ந்தது.</p><p>தேரை பக்தர்கள் இழுத்த போது சங்கிலி அறுந்த நிலையில், அதனை இணைக்க முயன்ற தொழிலாளி மணிவண்ணன் நிலைதடுமாறி தேரில் மோதி உயிரிழந்தார்.</p><p>கீரனூர் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p>
