மின் மாயனம் அமைக்கும் பணி தீவிரம்
6 Feb 2026, 5:17 pm
<p><strong>மின் மாயனம் அமைக்கும் பணி தீவிரம்</strong></p>
<p>உதகை, பிப்.6- மஞ்சனக்கொரை பகுதியில் மின் மயானம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி சார்பில், மஞ்சனக் கொரை பகுதியில் மின் மயானம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்பணி குறித்து நகர் மன்ற துணைத்தலைவர் ஜே.ரவிக்குமார் வெள்ளியன்று நேரில் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், நகராட்சி உதவி பொறி யாளர் கல்பனா, பணி மேற்பர்வையாளர்கள் ராமகிருஷ்ணன், தேன்மொழி, திமுக நகரச் செயலாளர் ரமேஷ், மாவட்ட பிரதி நிதி கார்த்திக், மாவட்ட அமைப்பாளர் காந்தல் ரவி, நகர் மன்ற உறுப்பினர்கள் விஷ்ணு, கஜேந்திரன், ரகுபதி, ஸ்டான்லி, ரஞ்சித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
