நில அளவைத் துறையில் பணி: 476 பேருக்கு நியமன ஆணை!
10 Dec 2025, 4:08 pm
<p><strong>நில அளவைத் துறையில் பணி: 476 பேருக்கு நியமன ஆணை!</strong></p>
<p>சென்னை, டிச. 10 - நில அளவைத் துறையில் 476 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில், புதன்கிழமையன்று நடைபெற்ற நிகழ்வில், நில அளவைப் பதிவேடுகள் துறையில் 376 நில அள வர்கள் மற்றும் 100 வரைவாளர்கள் பணியிடங் களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 10 பேருக்கு நேரடியாக பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். இந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மு.பெ. சாமிநாதன், அர. சக்கரபாணி, தலைமைச் செயலாளர் நா. முரு கானந்தம், துறையின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடந்த 4 ஆண்டுகளில் 800 நில அளவர்களும், 302 வரைவாளர்களும் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, சேந்தமங்கலம், பந்தலூர், கீழ்பெண்ணாத்தூர் ஆகிய வட்டங்களில் 13.97 கோடி ரூபாய் செலவில் 7000 மெட்ரிக் டன் கொள்ளளவில் கட்டப்பட்ட 3 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்களையும் காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார். 7 மாவட்டங்களில் 332 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.</p>
<p> </p>
