முந்தய பக்கம்

சுடர் ஒளி கூட்டமைப்பின் சார்பில் மகளிர் தின விழா

9 Mar 2026, 4:24 pm
சுடர் ஒளி கூட்டமைப்பின் சார்பில் மகளிர் தின விழா
<p><strong>சுடர் ஒளி கூட்டமைப்பின் சார்பில் மகளிர் தின விழா </strong></p> <p>சென்னை, மார்ச் 9- அம்பத்தூர் மண்ணூர்பேட்டையில் செயல்படும் சுடர் ஒளி கூட்டமைப்பின் சார்பில் புனித தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சர்வதேச மகளிர் தின விழா ஜெபசிபியா தலைமையில் ஞாயிறன்று (மார்ச் 8) நடைபெற்றது. இதில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டி.விஜயலட்சுமி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட சென்னை மாவட்டத் தலைவர் தேமொழிச்செல்வி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அம்பத்தூர் பகுதிச் செயலாளர் பா.மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பெண்களின் உரிமைகள், சமூக முன்னேற்றம் மற்றும் கல்வி குறித்த விழிப்புணர்வு குறித்து பேசினர். இதில் செயலாளர் லட்சுமி, பொருளாளர் ஷாலி, நிர்வாகிகள் காஞ்சனா, அனுராதா, ராகினி, ஜோதிஸ்வரி, மாதவி உள்ளிட்ட ஏராளமான பெண்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram