தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகளின் 50 ஆண்டு கால கனவு திட்டம் புது வருடத்தில் நிறைவேறுமா?

31 Dec 2025, 3:37 pm
விவசாயிகளின் 50 ஆண்டு கால கனவு திட்டம் புது வருடத்தில்  நிறைவேறுமா?
<p><strong>விவசாயிகளின் 50 ஆண்டு கால கனவு திட்டம் புது வருடத்தில் &nbsp;நிறைவேறுமா?</strong></p> <p>உடுமலை,டிச.31- அமராவதி அணை நிரம்பி உபரிநீர் &nbsp;ஆற்றில் வெளியேற்படுவதை தடுக்கும் &nbsp;வகையில், உபரி நீரை சேமிக்க அமரா வதி அணைக்கு மேல் பகுதியில் அப்பர் &nbsp;அமராவதி அணை என்றும், திருமூர்த்தி அணைக்கு எளிமையாக தண்ணீர் கொண்டுவரவும், &nbsp;சேமிக்கவும் &nbsp;நல் லாறு அணை கட்ட 50 ஆண்டுக்கு முன் &nbsp;அடிக்கல் நடப்பட்டது. இந்த புதிய ஆண் டிலாவது இத்திட்டம் நிறைவேற்றப் படுமா என விவசாயிகளின் எதிர்பார்க் கின்றனர். அப்பர் &nbsp;அமராவதி திட்டம்: அமராவதி அணைக்கு நீர் ஆதார மாக உள்ள பாம்பாறு, தேனாறு, சின் னாறு ஆகிய மூன்று ஆறுகள் இணைந்து, கூட்டாறு ஆற்றில் துவானம் &nbsp;அருவி அமைந்துள்ள &nbsp;இடத்தில் மழை &nbsp;காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்க சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் &nbsp;அப்பர் அமராவதி அணை என்ற பெய ரில் ஒரு தடுப்பு அணை கட்ட முடிவு &nbsp;செய்யப்பட்டது. இந்த அணையில் சுமார் 5 டிஎம்சி நீரை சேமித்து வைத்து, &nbsp;நீர் மின்சாரம் உற்பத்தி செய்வதுடன், கோடை காலங்களில் அப்பர் அமரா வதி அணையில் இருந்து தண்ணீரை அமராவதி அணைக்கு கொண்டு செல்ல &nbsp;முடியும். நல்லாறு அணை திட்டம்: பரம்பிக்குளம் &ndash; ஆழியாறு திட்டத் தில் கட்டப்பட்ட திருமூர்த்தி அணைக்கு &nbsp;மேல்நீராறு அணை வழியாக சுமார் 120 &nbsp;கிலோ மீட்டர் தொலைவில் இருந்து தண்ணீர் வருகிறது. தண்ணீர் வரும் &nbsp;தூரத்தை குறைக்கும் வகையிலும் கூடு தலாக தண்ணீரை சேமிக்கும் வகை யில், திருமூர்த்தி அணையில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவடப்பு பகுதியில் இருக்கும் நல்லாற்றின் குறுக்கே அணை கட்ட &nbsp;திட்டம் வகுக்கப்பட்டு அடிக்கல் நாட் டப்பட்டது. நல்லாறு அணையில் இருந்து கால்வாய் வழியாக சுமார் 18 &nbsp;கிலோமீட்டர் தூரத்தில் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வந்து சேரும். &nbsp;மேலும், கூடுதலாக மழை காலங்களில் &nbsp;தண்ணீரை சேமித்து வைத்து கொள்ள &nbsp;முடியும். இதனால் சுமார் 8 டிஎம்சி தண் ணீர் திருமூர்த்தி அணைக்கு வறட்சி காலங்களில் கிடைக்கும். எனவே புதிய அணைகள் கட்ட ஆய் வுகள் மேற்கொண்டு, அடிக்கல் நடப் பட்டு ஐம்பது வருடங்களுக்கு மேலாக &nbsp;திட்டம் மட்டுமே உள்ளது. நடைமு றைக்கு வரவில்லை. புதிய ஆண்டிலா வது இந்தக் கனவு திட்ட அணைக ளைக் கட்ட &nbsp;வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.