சேதமடைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடம் அகற்றப்படுமா?
1 Feb 2026, 3:51 pm
<p><strong>சேதமடைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடம் அகற்றப்படுமா?</strong></p>
<p>பாபநாசம், பிப்.1 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம் பேட்டை அருகே கணபதி அக்ரஹா ரத்தில் மெயின் சாலையையொட்டி உள்ள வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் சேதமடைந்து, பயன்பாடின்றி, மரக்கன்றுகள் வளர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. 55 ஆண்டுகளை கடந்த இந்த கட்ட டத்தை இடித்து விட்டு, புதிதாக கட்ட நிதி ஒதுக்கீடு செய்தும், சேதமடைந்த பழைய கட்டடத்தை இடிக்கவோ, புதிதாக கட்டடம் கட்டவோ தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. குறைதீர் கூட்டங்களில் பழுதடைந்த இந்த கட்டடம் தொடர்பாக, விவசாயிகள் தரப்பில் பேசியும், நட வடிக்கை எடுக்காதது அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலை யில், பழுதடைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்ட மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்குமா என அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க் கின்றனர்.</p>
