முந்தய பக்கம்

நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றுவேன்!

11 Apr 2026, 5:30 am
நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றுவேன்!
<p><strong>நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றுவேன்!</strong></p><p>திமுக வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதி தருமபுரி, ஏப்.10- &quot;நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதியளித்தார்.</p><p>தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி.என்.செந்தில்குமார், நல்லம்பட்டி, அத்தனுார்அள்ளி, கொலசனஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் வெள்ளியன்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அடிப்படை வசதியான குடிநீர், சாலை, பேருந்து வசதி குறித்து பொதுமக்கள் முன்வைத்தனர்.</p><p>இதைக்கேட்ட வேட்பாளர், நிச்சயம் தங்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். மேலும், அலியாளம் - தூள்செட்டி ஏரி இணைப்பு கால்வாய் திட்டம், தெற்கத்திகாவ் புங்கார கால்வாய் திட்டம், எண்ணேகொல்புதூர் - தும்பலஅள்ளி இணைப்பு கால்வாய் திட்டம் ஆகிய நீர் பாசன திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.</p><p>இந்நிகழ்வில், தொகுதி பார்வையாளர் டி.அன்பழகன், மாநில விவசாய அணி துணைச்செயலாளர் சுப்பிரமணி, ஒன்றியச் செயலாளர் அன்பழகன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram