தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அசாம் பாஜக அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படுவாரா? - எம்.ஏ.பேபி கேள்வி!

17 Nov 2025, 2:20 pm
அசாம் பாஜக அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படுவாரா? - எம்.ஏ.பேபி கேள்வி!
<p>இஸ்லாமியர்கள் படுகொலையை குறிக்கும் காலிஃப்ளவர் தோட்டம் புகைப்படத்தை பகிர்ந்த அசாம் பாஜக அமைச்சர் அசோக் சிங்கால் கைது செய்யப்படுவாரா என சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கேள்வி எழுப்பியுள்ளார். &nbsp;<br /> இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:<br /> அசாம் அமைச்சரவையில் இருக்கும் பாஜக தலைவர் ஒருவர், நமது வரலாற்றில் நடந்த இருண்ட நிகழ்வுகளில் ஒன்றோடு தொடர்புடைய ஒரு பிம்பத்தை வெளிப்படையாகப் பயன்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 1989-ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று பீஹாரின் லோகைனில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 116 முஸ்லிம்கள் கொடூரமாக வெட்டப்பட்டும், எரிக்கப்பட்டும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டனர். இந்த கொலைகளை மறைக்க அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தின் மேல் காலிஃப்ளவர் நடப்பட்டது.<br /> காலிஃப்ளவர் புகைப்படம் வேண்டுமென்றே பதிவிடப்பட்டது, முஸ்லிம்களை மனிதத்தன்மையின்றி நடத்த இந்துத்துவா வெறியர்களுக்கு ஒரு அறைகூவல் விடும் நோக்கம் கொண்டுள்ளதாக இருக்கிறது. &quot;எல்லோரையும் அரவணைப்போம். எல்லோருக்குமான வளர்ச்சி&quot; என பாஜக கூறுகிறது; ஆனால் அதன் தலைவர்களும், நிர்வாகிகளும் மீண்டும் மீண்டும் வெறுப்புப் பேச்சுகள் மூலம் சமூகத்தை பிளவுப்படுத்தும் தீப்பிழம்புகளைத் தூண்டிவிடுகிறார்கள். இதற்கு பாஜக பொறுப்பேற்று, அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதற்காக அமைச்சர் அசோக் சிங்காலை உடனடியாக பதவி நீக்கம் செய்யுமா?&quot; இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.