தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாடில் 8 அகழாய்வுகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி தராதது ஏன்? - சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

3 Mar 2026, 6:45 am
தமிழ்நாடில் 8 அகழாய்வுகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி தராதது ஏன்? - சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி
<p>தமிழ்நாட்டில் 8 அகழாய்வுகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி தராதது ஏன் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.<br /> கீழடி, ஆதிச்சனூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளுக்கு ஒன்றிய பாஜக அரசு உடனடி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. இந்த திட்டங்கள் ஜூலை 2025 இல் சமர்ப்பிக்கப்பட்டு நவம்பரில் ஏஎஸ்ஐ இயக்குநர் ஜெனரலின் கீழ் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டன. ஆனால் அனுமதி 8 மாதங்களாக நிலுவையில் உள்ளது. இந்தக் கோரிக்கையை மாநில அரசு மீண்டும் மீண்டும் எழுப்பி வரும் நிலையில், அதனை ஒன்றிய அரசு புறக்கணிக்கப்படுகிறது.<br /> தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி காலம் ஜனவரி முதல் ஜூலை வரை மட்டுமே நீடிக்கும். இந்த கால அவகாசம் தவறவிட்டால், பருவமழை நிலைமைகள் களப்பணியை முடக்கும், முக்கிய ஆராய்ச்சியை தாமதப்படுத்தும் மற்றும் 2025-2026 க்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை வீணடிக்கும்.<br /> இந்த நிலையில், தமிழ்நாட்டில் 8 அகழாய்வுகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி தராதது ஏன் என்று கேள்வி எழுப்பிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன், உங்களின் அரசியல் சிறுமைத்தனங்களை எங்கள் வரலாற்றுப் பேரியக்கம் தவிடு பொடியாக்கும் என்று தெரிவித்துள்ளார்.<br /> இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:<br /> &quot;கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 8 அகழாய்வுகளுக்கு 8 மாதங்களாக அனுமதி தராதது ஏன்?&nbsp;<br /> பருவமழை தொடங்கினால் நிதி வீணாகும் , ஆராய்ச்சி முடங்கும் எனத் தெரிந்தும் மௌனம் காப்பது ஏன்?<br /> தமிழரின் தொன்மையைத் தடுக்க இடைவிடாது இயங்கும் மோடி அரசு ஒன்றை மறந்துவிட்டது.<br /> எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உங்களால் கைவிடப்பட்ட கீழடி அகழாய்வுக் குழிகளில் இருந்து தான் தொன்மை நோக்கிய எங்களின் பயணம் பாய்ச்சல் வேகங்கொண்டது.<br /> எகிப்திய பிரமீடுகளிலும் சிகை கொற்றன் சிலிர்த்து நிற்கிறான்.<br /> இப்பொழுது மீண்டும் தடுக்கிறீர்கள்.&nbsp;<br /> உங்களின் அரசியல் சிறுமைத்தனங்களை எங்கள் வரலாற்றுப் பேரியக்கம் தவிடு பொடியாக்கும்.&quot;<br /> இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.