கூலிப்படை கூடாரம் எங்கே?
6 Apr 2026, 4:15 pm
<p><strong>கூலிப்படை கூடாரம் எங்கே?</strong></p>
<p>“ஆ ம்ஸ்ட்ராங் கொலையால் தமிழகம் கூலிப்படை கூடாரமாகிவிட்டது” என பாஜகவின் எஸ்.ஜி. சூர்யா பொங்கியுள்ளார். ஆனால், இதில் ஒரு பெரிய ‘ட்விஸ்ட்’ ஒளிந்திருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகிச் சிறையில் இருக்கும் அஞ்சலை, பாஜகவின் வட சென்னை மாவட்டத் தலைவராக இருந்தவர். சொந்தக் கட்சிப் பிரமுகரே கொலை வழக்கில் சிக்கியுள்ள நிலையில், அடுத்தவர் பக்கம் விரலை நீட்டுவது விந்தையிலும் விந்தை. கருப்பை வெள்ளை என்று சாதிப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களே!</p>
