தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கரைப்புதூரில் பணம் செலுத்தியவர்களுக்கு குடிநீர் இணைப்பு கிடைப்பது எப்போது?

5 Dec 2025, 4:21 pm
கரைப்புதூரில் பணம் செலுத்தியவர்களுக்கு குடிநீர் இணைப்பு கிடைப்பது எப்போது?
<p><strong>கரைப்புதூரில் பணம் செலுத்தியவர்களுக்கு குடிநீர் இணைப்பு கிடைப்பது எப்போது?</strong></p> <p>திருப்பூர், டிச. 5 &ndash; பல்லடம் ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சியில் குடிநீர் இணைப்புக்கு பணம் &nbsp;செலுத்தி ஓராண்டாகியும் &nbsp;வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. &nbsp;உடனடியாக இவர்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஈ.பாலசுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி &nbsp;அலுவலருக்கு, ஈ.பாலசுப்பிரமணியம் கொடுத்துள்ள மனு வில் கூறியிருப்பதாவது: கரைப்புதூர் ஊராட்சியில் முன்னாள் &nbsp;ஊராட்சித் தலைவர் காலத்தில் வீட்டுக்குடிநீர் இணைப்புக்கு பலர் முன்பணம் செலுத்தியுள்ளனர். அதற்கான ரசீதுகளும் &nbsp;பெற்றுள்ளனர். 50க்கும் மேற்பட்டோரின் சான்று கொடுக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே இணைப்பு அனுமதி வழங்கப்பட் டும் கடந்த ஒரு வருடமாக குடிநீர் இணைப்பு தரப்படா ததால் மக்கள் இக்கட்டான நிலையைச் சந்தித்து வருகின்ற னர். மேலும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, மனுக் &nbsp;கொடுத்தும் இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்பட வில்லை. வரி செலுத்தத் தயாராக இருந்தும் இணைப்புத் &nbsp;தரப்படாததால் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே மாவட்ட திட்ட இயக்குநர் கிராமசபையில் வழங்கிய &nbsp;உத்தரவுப்படி உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண் டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.