தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருமூர்த்தி அணை பூங்காக்கள் பூட்டியே இருக்கும் மர்மம் என்ன?

26 Dec 2025, 4:32 pm
திருமூர்த்தி அணை பூங்காக்கள் பூட்டியே இருக்கும் மர்மம் என்ன?
<p><strong>திருமூர்த்தி அணை பூங்காக்கள் பூட்டியே இருக்கும் மர்மம் என்ன?</strong></p> <p>உடுமலை, டிச.26 - சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் திருமூர்த்தி அணைப் பகுதியில் இருக்கும் &nbsp;பூங்கா யாருக்கும் பயன்படாத வகையில் &nbsp;பூட்டி வைத்திருக்கும் மர்மம் தெரியாமல் &nbsp;உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் சுற் றுலாத் தலங்களில் தினமும் அதிக மக்கள் &nbsp;வரும் திருமூர்த்திமலையில் எவ்வித அடிப் படை வசதிகளும் இல்லை. அனைவருக்கும் &nbsp;பயன்படும் வகையில் வசதிகளை செய்ய &nbsp;மாவட்ட சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க &nbsp;வேண்டும் என பலமுறை தெரிவித்தும் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. &nbsp;இந்நிலையில் அணையின் கரைப்பகுதியில் &nbsp;ஏற்கனவே இரண்டு பூங்கா இருந்தும் திறக் கப்படாத நிலையில், தற்போது வனத்துறை &nbsp;மற்றும் &nbsp;வனத்திற்குள் திருப்பூர் என்ற தன் னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், &nbsp;எத்தலப்பர் மணிமண்டபம் எதிரில் மரகதப் பூஞ்சோலை என்ற பெயரில் மூலிகை செடிக ளுக்கு மத்தியில் பூங்கா நடைமேடைகளுடன் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது. இந்த பூங்கா தொடங்கப்பட்ட நாள் முதல் &nbsp;மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரா மல் பூட்டியே உள்ளது. ஏற்கனவே இதே &nbsp;பகுதியில் இரண்டு பூங்காவும் பூட்டியே கிடக் கும் நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு &nbsp;பூங்கா இணைந்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு என்று கட்டப் பட்ட பூங்காவை திறக்காமல் பூட்டி வைத் &nbsp;துள்ளதன் காரணம் என்ன ? என்று தெரியாமல் &nbsp;சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின் றனர். திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை திரு மூர்த்திமலை, அமராவதி அணையை சுற் றுலாப் பயணிகள் நலன் கருதி அடிப்படை &nbsp;வசதி செய்து பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வர &nbsp;வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.