ஈரநிலம் - கு.மணி
13 Jun 2026, 7:25 pm
<p><strong>ஈரநிலம் - கு.மணி</strong></p><p>பூமியின் கருப்பைக்குள் சுற்றிக் கிடக்கும் தொப்புள் கொடித் துண்டுகள் </p><p>பெயரறியா விதைகளின் ஆயுட்கால ரகசியங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கும் மௌனக் களஞ்சியங்கள் </p><p>தாகத்தின் தழும்புகளை கடல் நீரால் கழுவி விட்டு சேற்றின் வாசனையில் மழை நீரைப் பருகி கிடக்கும் ஒரு பச்சைத் தவம்.....</p><p> இங்கேதான் காலத்தின் கால் தடங்கள் புதைந்து போகின்றன ஆனால்.....</p><p>நாகரிகத்தின் அடையாளங்கள் இந்த ஈர நிலத்தின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கின்றன </p><p>கான்கிரீட் கனவுகள் தாகத்தை அறிவதில்லை.... தாகம் தீர்க்கும் நீர் அல்ல - இது பூமியின் நரம்புகளில் பாய்ந்து கொண்டிருக்கும் பச்சை ரத்தம்!</p><p>ஈரநிலங்கள் காய்வது வெறும் நீர் வற்றுவது அல்ல பூமித்தாயின் ரத்த ஓட்டம் நின்று பிணமாக மாறுவதன் அடையாளம்....</p>
