ராணிப்பேட்டையில் ஈர நிலங்கள் பாதுகாப்பு கருத்தரங்கு
3 Mar 2026, 3:38 pm
<p><strong>ராணிப்பேட்டையில் ஈர நிலங்கள் பாதுகாப்பு கருத்தரங்கு</strong></p>
<p>ராணிப்பேட்டையில் வனத்துறை சார்பில் ஈர நிலங்கள் பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கு ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து, ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுத்தொகையும், இயற்கை நடைபயணத்தில் பங்கேற்ற அம்மூர், வேலம், நீலகண்டராயபுரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வின் நிறைவாக வனவிலங்கு பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.</p>
