முந்தய பக்கம்

ராணிப்பேட்டையில் 2,582 பேருக்கு ரூ. 6.27 கோடி நலத்திட்ட உதவிகள்

6 Dec 2025, 6:20 pm
ராணிப்பேட்டையில் 2,582 பேருக்கு ரூ. 6.27 கோடி நலத்திட்ட உதவிகள்
<p><strong>ராணிப்பேட்டையில் 2,582 பேருக்கு ரூ. 6.27 கோடி நலத்திட்ட உதவிகள்</strong></p> <p>ராணிப்பேட்டை, டிச.6- அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் &nbsp;தொடங்கி வைத்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் விழா நடைபெற்றது. வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி &nbsp;கலந்துகொண்டு, 2,582 பயனாளிகளுக்கு ரூ. 6.27 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் உட்படப் பல அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram