பளு தூக்கும் வீரர் கார்த்திக் உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை
10 Dec 2025, 4:08 pm
<p><strong>பளு தூக்கும் வீரர் கார்த்திக் உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை</strong></p>
<p>சென்னை, டிச. 10- ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் டிசம்பர் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை “உலக சாம்பியன்ஷிப் XI 2025”பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 30 நாடுகள் பங்கேற்றன. இந்தியா சார்பில் 50 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்த ம.கார்த்திக் (38) 67.5 கிலோ எடை சீனியர் ஓபன் பிரிவில் மொத்தமாக 467.5 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பெற்று, ஒரு தங்கப் பதக்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கம் வென்று உலக சாம்பியன் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் உலக அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு கார்த்திக் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
