ஏற்கத்தக்க அறிவிப்பை அரசு வெளியிடும் என்று நம்புகிறோம்! அங்கன்வாடி ஊழியர் சங்கம் எதிர்பார்ப்பு
19 Jan 2026, 2:23 pm
<p><strong>ஏற்கத்தக்க அறிவிப்பை அரசு வெளியிடும் என்று நம்புகிறோம்! அங்கன்வாடி ஊழியர் சங்கம் எதிர்பார்ப்பு</strong></p>
<p>சென்னை, ஜன.19 - ஜன.27-க்கு முன்பாக ஏற்கத்தக்க அறிவிப்பை அரசு வெளியிடும் என்று நம்புவதாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதி 313-இன்படி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், உதவியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் பணிக்கொடை வழங்க வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு குடும்ப ஓய்வூதியமாக 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மே மாதம் முழுமையும் கோடை விடுமுறை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் ஜன.27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். இந்நிலையில் திங்களன்று (ஜன.19) தலைமைச் செயலகத்தில் சமூக நலத் தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் மெர்சி ரம்யா உள்ளிட்டோர் சங்கத் தலைவர் ஏ.பாக்கியமேரி, பொதுச் செயலாளர் எஸ்.தேவமணி, பொருளாளர் சித்ரா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேவமணி, “பேச்சுவார்த்தை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. ஜன.27 ஆம் தேதிக்குள் ஏற்கத்தக்க அறிவிப்பை அரசு வெளியிடும் என்று நம்புகிறோம். அரசின் அறிவிப்பை பொறுத்து முடிவெடுக்கப்படும்” என்றார்.</p>
