எல்லீஸ்சத்திரம் அணையிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு
24 Nov 2025, 3:26 pm
<p><strong>எல்லீஸ்சத்திரம் அணையிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு</strong></p>
<p>விழுப்புரம் அருகே தென் பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள எல்லீஸ்சத்திரம் தடுப்பணையில் இருந்து, திங்களன்று (நவ. 24) விவசாயப் பாசனத்திற்காக ஆழங்கால் வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்று, தென் பெண்ணை ஆற்றில் உள்ள எல்லீஸ்சத்திரம் தடுப்பு அணைக்கட்டில் இருந்து, இடதுபுறமாக உள்ள ஆழங்கால் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. வாய்க்காலில் தண்ணீர் பாய்ந்து ஓடியதால், அப்பகுதி விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.</p>
