பிஏபி தொகுப்பு அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறப்பு
19 Jan 2026, 2:23 pm
<p><strong>பிஏபி தொகுப்பு அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறப்பு</strong></p>
<p>உடுமலை, ஜன.19- பிஏபி திட்டத்தில் 4ஆம் மண்டல பாசனத் திற்கு வழங்குவதற்கு திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் மூலமாக வந்து கொண்டி ருந்த தண்ணீர் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பிஏபி காண்டூர் கால்வாயில் பழுதடைந்த இடங்க ளில் நடைபெற்று வந்த பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நிறைவு பெற்றதால், ஜன.18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் தூணக்க டவு அணையில் இருந்து சர்க்கார்பதி வழி யாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் பணிகளை நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். மேலும், சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில், படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப் பட்டு ஜன.20 ஆம் தேதி முதல் காண்டூர் கால் வாயில் முழு கொள்ளளவு தண்ணீர் எடுப்ப தற்கான நடவடிக்கைகளை நீர்வளத் துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர். பிஏபி திருமூர்த்தி அணை நீர்த்தேக்கத் திட்டக் குழு, பகிர்மானக் குழு தலைவர்கள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கூட்டாக ஆலோசனை செய்து, அரசுக்கு பரிந்து ரைத்து, தண்ணீர் திறப்பதற்கான அர சாணை பெற்று இம்மாதம் 24 ஆம் தேதி முதல் முதலாம் மண்டல பாசனத்திற்கு ஐந்து சுற்று கள் தண்ணீர் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் உடுக்கம்பா ளையம் பரமசிவம் தெரிவித்தார்.</p>
<p> </p>
