திண்டிவனத்தில் கிடங்கல் ஏரி நிரம்பியதால் நகரத்திற்குள் தண்ணீர் புகுந்தது
3 Dec 2025, 2:59 pm
<p><strong>திண்டிவனத்தில் கிடங்கல் ஏரி நிரம்பியதால் நகரத்திற்குள் தண்ணீர் புகுந்தது</strong></p>
<p>விழுப்புரம், டிச.3- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகரப் பகுதியை ஒட்டி உள்ள கிடங்கல் ஏரி நிரம்பியதால் நீர் வழிந்து நகரத்துக்குள் தண்ணீர் புகுந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது, வானிலை அறிக்கை படி டிட்வா புயலின் போது ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டும் விழுப்புரம் மாவட்டத்திற்கு புயல் ஆபத்து மற்றும் கன மழை ஆபத்தும் நீங்கியது, ஆனாலும் கடந்த 2 நாட்க ளாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன் கிழமை அதிகாலை 3 மணி முதல் காலை சுமார் 9 மணி வரை திண்டிவனத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தது, இதனால் நகர பகுதியில் பெய்த மழை யின் மழை தண்ணீர் திண்டி வனம் அருகே உள்ள கிடங்கல் ஏரிக்கு பெற்றதால் கிடங்கள் ஏறி முழுமையாக நிரம்பியது, அதனால் உபரி நீர் வழிந்து திண்டிவனம் பகுதியில் தேசிய நெடுஞ் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவியது. இதனால் பொதுமக்களு டையே பரபரப்பு ஏற்பட்டது.</p>
