குன்னத்தூரில் பள்ளி மாணவருக்கு நேர்ந்த தீக்காயம் விபத்தா? கொடுமையா? - விசாரிக்க வலியுறுத்தல்
31 Jan 2026, 3:56 pm
<p><strong> குன்னத்தூரில் பள்ளி மாணவருக்கு நேர்ந்த தீக்காயம் விபத்தா? கொடுமையா? - விசாரிக்க வலியுறுத்தல்</strong></p>
<p>திருப்பூர், ஜன.31 - திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள குன்னத்தூர் அரசு உதவிபெறும் பள்ளியில், 8 ஆம் வகுப்பு மாணவர் ரக்சித் ஜோஸ் தீக் குழியில் விழுந்து காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என ஜனநாயக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. சம்பவம் என்ன? குன்னத்தூர் என்.ஆர். கருப் பண்ண நாடார் பள்ளியில் பயிலும் பனியன் தொழிலாளி ஜெயராஜின் மகன் ரக்சித் ஜோஸ், வெள்ளியன்று மாலை வழக்கம் போல வகுப்பறை குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். குப்பைகளை வளா கத்தில் உள்ள குழியில் கொட்டிய போது, சக மாணவர்கள் இருவர் ரக்சித்தின் கை கால்களைத் தூக்கிக் குழியில் வீசியதாகக் கூறப்படுகிறது. முந்தைய நாள் எரிக்கப்பட்ட குப்பை யின் அடியில் தீக்கனல் இருந்த தால், ரக்சித்தின் கை மற்றும் இடுப்புப் பகுதியில் பலத்த தீக்கா யம் ஏற்பட்டது. தற்போது அவர் பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உருவக்கேலியும் சாதியப் பாகுபாடும்? மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரைச் சந்தித்து இந்திய மாணவர் சங்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் நலம் விசாரித்தனர். அப்போது, பள்ளியில் சில ஆசிரி யர்கள் ரக்சித்தை உருவக்கேலி செய்ததாகவும், மாணவர்கள் சிலர் தொடர்ந்து அவரை அவமானப் படுத்தி வந்ததாகவும், மாணவரும் அவரது பெற்றோரும் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். இது தற்செய லாக நடந்த விபத்து மட்டுமல்ல, தொடர்ச்சியான பாகுபாட்டின் விளைவோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காவல்துறையின் விளக்கம் இச்சம்பவம் குறித்து திருப்பூர் மாவட்ட காவல்துறை சனிக்கிழமை மாலை அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளது. அதில், “மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது சமநிலை தவறி விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதில் தீங்கிழைக் கும் நோக்கமோ அல்லது சாதியப் பாகுபாடோ இல்லை” எனத் தெரி விக்கப்பட்டுள்ளது. ஜனநாயக அமைப்புகளின் கோரிக்கைகள் இந்நிலையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மாணவர் சங்கத்தினர், மாணவர் தீயில் தள்ளப் பட்டது குறித்து கல்வித்துறையும் காவல்துறையும் நேர்மையாக, முழு விசாரணை நடத்த வேண்டும்; இதில் தீண்டாமை அல்லது வன்கொடுமை நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட வர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாணவர்களைத் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தும் முறையை உடனடியாகக் கைவிட்டு, பள்ளிகளுக்குப் பகுதிநேரப் பணி யாளர்களை நியமிக்க வேண்டும்; மாணவரை உருவக்கேலி செய்த ஆசிரியர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தியுள்ளனர்.</p>
