வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையம்
22 Jan 2026, 2:57 pm
<p><strong>வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையம்</strong></p>
<p>தென்காசி, ஜன.22- தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் - மாவட்ட ஆட்சித்தலை வர் ஏ.கே.கமல்கிஷோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்- 2026 நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறைகள் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார் ஆட்சியர் அலுவலகம், தென்காசி மற்றும் சங்கரன்கோவில், வருவாய் கோ ட்டாட்சியர் அலுவலகங்களில் நிலையான செயல்முறை விளக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p>
