மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் வாக்காளர் விழிப்புணர்வு வாகனப் பேரணி
27 Mar 2026, 3:15 pm
<p><strong>மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் வாக்காளர் விழிப்புணர்வு வாகனப் பேரணி</strong></p>
<p>மதுரை, மார்ச் 27- மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகில் இருந்து, ரோட்டரி சங்கம் மற்றும் சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் “100 சதவீதம் வாக்களிப்போம்” என்ற கோ ஷத்துடன் வெள்ளியன்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கே .ஜே. பிரவீன் குமார் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பில் மாற்றுத்திற னாளிகள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகனப்பேர ணியை மதுரை மாவட்ட ஆட்சித் தலை வர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட வருவாய் துறை அதிகாரி தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரி முன்னிலை வகித்தார் . இதில் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் டி. குமரவேல், மாவட்ட தலைவர் என். மதிபாரதி , மாவட்ட செயலாளர் ஆ. பால முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
