தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திமுக அரசின் நற்பணிகள் தொடர வாக்களிப்பீர் திருவொற்றியூர் பிரச்சாரத்தில் எல்.சுந்தரராஜ் பேச்சு

10 Apr 2026, 5:30 am
திமுக அரசின் நற்பணிகள் தொடர வாக்களிப்பீர் திருவொற்றியூர் பிரச்சாரத்தில் எல்.சுந்தரராஜ் பேச்சு
<p><strong>திமுக அரசின் நற்பணிகள் தொடர வாக்களிப்பீர் திருவொற்றியூர் பிரச்சாரத்தில் எல்.சுந்தரராஜ் பேச்சு</strong></p><p>சென்னை, ஏப். 9: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல். சுந்தரராஜ், 12-ஆவது வார்டு இரோசையியம்மன் கோவில் அருகில் இருந்து விடியற்காலை (ஏப். 9) தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.</p><p>பின்னர் 12-ஆவது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடமும், வணிகர்களிடமும் வாக்கு சேகரித்தார். வேட்பாளர் சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பும், பெண்கள் வெற்றித் திலகமிட்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.</p><p>அப்போது செய்தியாளர்களிடம் எல்.சுந்தரராஜ் பேசுகையில், காலப்படைப் பகுதியில் புதிய நூலகம் மற்றும் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். திமுக ஆட்சியில் ஏராளமான திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.