தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வ.உ.சி. துறைமுகத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் திறன் கொண்ட பசுமை அமோனியா ஆலை அமைக்க ஒப்பந்தம்

29 May 2026, 11:02 pm
வ.உ.சி. துறைமுகத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் திறன் கொண்ட பசுமை அமோனியா ஆலை அமைக்க ஒப்பந்தம்
<p><strong>வ.உ.சி. துறைமுகத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் திறன் கொண்ட பசுமை அமோனியா ஆலை அமைக்க ஒப்பந்தம்</strong></p><p> தூத்துக்குடி, மே 29 தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் செய்யப் பட்டு வரும் பல்வேறு சுற்றுச்சூழல் சார் பாதுகாப்புத் திட்டங்களின் தற் போதைய முன்னேற்றம் குறித்து இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகச் (MNRE) செயலாளர் சந்தோஷ் குமார் சாரங்கி விரி வான ஆய்வு நடத்தினார். செயலாளரின் இந்த முக்கிய வருகையின் போது, வ.உ.சி. துறை முகத்தின் சுற்றுப்புறச் சூழல் மேலாண்மைத் திறனை சர்வதேச அளவிற்கு மேம்படுத்தும் நோக் கில் இரண்டு பிரதான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முறைப்படி பரி மாறிக் கொள்ளப்பட்டன: பீரோ வெரிடாஸ் ஒப்பந்தம் துறைமுகத்தின் பசுமைச் சான்றிதழ் நடைமுறைகள், கார்பன் உமிழ்வு கணக்கீடு (Emission Tracking), சுற்றுச்சூழல் நிலைத் தன்மை அறிக்கைகள், பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் பசுமை எரிபொ ருட்கள் தொடர்பான ஒரு பிரத்யேக சிறப்பு மையம் (Centre of Excellence) அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏஎம் கிரீன் அமோனியா ஒப்பந்தம் தூத்துக்குடியில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் உற்பத்தித் திறன் கொண்ட பசுமை அமோனியா உற் பத்தி ஆலையை உருவாக்குவதற் காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தா னது. இத்திட்டத்தின் மூலம், வ.உ.சி. துறைமுகத்தை ஐரோப்பா மற்றும் ஆசியாவின் முக்கிய சர்வ தேசத் துறைமுகங்களுடன் பசுமை எரிபொருள் வழித்தடங்கள் வழி யாக இணைப்பதற்கும், உலகளா விய மதிப்புச் சங்கிலியில் இந்தியா வின் நிலையை வலுப்படுத்து வதற்கும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகச் செயலா ளர் சந்தோஷ் குமார் சாரங்கி முன் னிலையில், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் தலை வர் சுசாந்த் குமார் புரோஹித், ஏஎம் கிரீன் அமோனியா நிறுவனத் தின் வணிக மேம்பாட்டுத் துணைத் தலைவர் சதான்சு அகர்வால் மற்றும் பீரோ வெரிடாஸ் நிறுவ னத்தின் பகுதி மேலாளர் என். கிருஷ்ண பாபு ஆகியோர் இந்த உடன்படிக்கைப் பிரதிகளையும் கோப்புகளையும் முறைப்படி பரி மாறிக் கொண்டனர். பசுமைத் திட்டங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப ஆய்வு: துறை முகத்தில் தற்போதைய சூழலில் செயல்பாட்டில் உள்ள 10 Nm&#179; திறன் கொண்ட பசுமை ஹைட்ரஜன் ஆலை, மின்சார வாகன மின்னேற்ற நிலையம் மற்றும் 9 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஆகிய வற்றின் செயல்பாட்டு முன்னேற்றங் களைச் செயலாளர் நேரில் பார்வை யிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந் தார். மேலும், எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள 750 கன மீட்டர் திறன் கொண்ட பசுமை மெத்த னால் எரிபொருள் நிரப்பும் நிலைய உள்கட்டமைப்பையும் அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் மெய்நிகர் மாதிரி செயலியை (Digital Twin) பார்வையிட்ட அவருக்கு, துறை முகத்தின் செயல்பாடுகளை நிகழ் நேரக் கண்காணிப்பு (Real-time Monitoring) மற்றும் முன்கூட்டிய பராமரிப்பு (Predictive Maintenance) மூலம் எவ்வாறு திறம்படக் கையாள முடிகிறது என்பது குறித்துத் துறைமுகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் நேரடி விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சகச் செயலாளர் சந்தோஷ் குமார் சாரங்கி, வ.உ.சி. துறை முகம் மேற்கொண்டு வரும் சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தி, பசுமை ஹைட்ரஜன் போன்ற உன்னத முயற்சிகள் உலகளாவிய அளவில் சுற்றுச்சூழல் மாற்றத்திற் கான ஒரு முன்னோடி மாதிரியாக உருவெடுத்துள்ளதாகவும், வரும் ஆண்டுகளுக்குள் நிகர பூஜ்ஜிய (Net Zero) நிலையை அடையத் துறைமுகம் எடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்றும் குறிப் பிட்டார். அதனைத் தொடர்ந்து பேசிய துறைமுக ஆணையத்தின் தலைவர் சுசாந்த் குமார் புரோஹித், கிளாஸ் கோவில் நடைபெற்ற சர்வதேச பருவநிலை மாற்ற மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ‘பஞ்சாமிர்த’ இலக்கு களை மிகக் கச்சிதமாக நிறை வேற்ற இந்தத் தூத்துக்குடி துறை முகப் பசுமைத் திட்டங்கள் பெரும் பங்களிப்பாக இருக்கும் என்று தெரிவித்தார்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.