அருப்புக்கோட்டையில் ‘விழுதுகள்’ சேவை மையம் திறப்பு
16 Feb 2026, 2:37 pm
<p><strong>அருப்புக்கோட்டையில் ‘விழுதுகள்’ சேவை மையம் திறப்பு</strong></p>
<p>அருப்புக்கோட்டை, பிப்.16- அருப்புக்கோட்டை ஒன்றியம் பந்தல் குடியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.16.22 லட்சம் மதிப்பில் அமைக் கப்பட்ட வட்டார அளவிலான “விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம்” காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி மையத்தைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்வேல், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
