100 நாள் வேலை வழங்க விதொச வலியுறுத்தல்
15 Mar 2026, 4:11 pm
<p><strong>100 நாள் வேலை வழங்க விதொச வலியுறுத்தல்</strong></p>
<p>கோவை, மார்ச் 15- விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் வடசித்தூர் ஊராட்சி மன்ற அலுவல கத்தில் மனு அளித்தனர். கோவை மாவட்டம், வடசித்தூர் ஊராட்சியில் கடந்த இரண்டு வாரமாக, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, ஆன்லைன் பதிவில் உங்க ளுக்கு பதிவு வரவில்லை என்று கூறி வேலை மறுக்கபடு கிறது. இந்நிலையில், பதிவுசெய்த தொழிலாளர்கள் அனை வருக்கும் வேலை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். நிலுவையிலுள்ள சம்பளத்தை விரைந்து வழங்க வேண் டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் சனியன்று வடசித்தூர் ஊராட்சி மன்ற அலுவ லகத்தில் மனு அளித்தனர். இந்நிகழ்வில், சங்கத்தின் தாலுகா தலைவர் பி.ஆனந்தராஜ், விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் வி.ஆர்.பழனிச்சாமி, கிணத்துக்கடவு நிர்வாகி ரமேஷ் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
