விதொச ஆர்ப்பாட்டம்
18 Feb 2026, 3:04 pm
<p><strong>விதொச ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>சேலம், பிப்.18- விவசாய விரோத ஒன்றிய அரசை கண்டித்து, விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் சேலத்தில் புதனன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நூறு நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி வழங்க வேண்டும், 600 ரூபாய் கூலி வழங்க வேண்டும். வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனையும் வீடு இல்லாதவர்க ளுக்கு வீடு கட்டித்தர வேண்டும். மகாத்மா காந்தி பெயரிலான திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்தும் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் ஜி.கணபதி தலைமை ஏற்றார். இதில், மாவட்டச் செயலாளர் எஸ்.கே. சேகர், மாநில நிர்வாகி எம்.முத்து, வி.தங்கவேல், சி.எஸ்.பழனியப்பன் உள்ளிட்ட ஏராளமான விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற் றனர்.</p>
