விண்ணப்பித்து 2 ஆண்டு ஆகியும் உதவித்தொகை வழங்கப்படவில்லை பார்வை மாற்றுத்திறனாளி வேதனை
29 May 2026, 10:10 pm
<p><strong>விண்ணப்பித்து 2 ஆண்டு ஆகியும் உதவித்தொகை வழங்கப்படவில்லை பார்வை மாற்றுத்திறனாளி வேதனை</strong></p><p>விருதுநகர், மே 29- விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவிகித நிரந்தர ஊனமுள்ள கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஒருவர் உதவித் தொகை கோரி மனு அளித்து சுமார் 2 ஆண் டுகளாகியும் உதவித் தொகை கிடைக்க வில்லை. </p><p>இதனால் அவர் மிகுந்த மன வேத னையில் உள்ளார்.</p><p> அருப்புக்கோட்டை வட்டம், கல்லூ ரணி அருகேயுள்ளது முத்துராமலிங்க புரம். இப்பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.சீனி வாசகன் (48). </p><p>இவருடைய இரு கண்களின் பார்வையிலும் குறைபாடு உள்ளது. எனவே, சாதாரண மனிதர்களைப் போல் அனைத்து வேலையையும் இவரால் செய்ய முடியாது. </p><p>எனவே, இவர் மாற்றுத் திறனாளிக ளுக்கான அட்டை வேண்டி விண்ணப்பித் துள்ளார். </p><p>இவரை பரிசோதித்த மருத்து வர்கள் 100 விழுக்காடு ஊனம் உள்ளது என சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கியுள்ளனர். </p><p>எனவே, உதவித் தொகை கோரி கடந்த 2023 செப்டம்பர் 2 அன்று இ-சேவை மையத்தில் மனு அளித்துள்ளார். </p><p>ஆனால் உதவித் தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து சீனிவாசகன் கூறுகை யில், நான் தனியாக எங்கும் செல்ல இய லாது. </p><p> ஒருவர் உதவிக்கு இருந்தால் மட்டுமே செல்ல முடியும். இந்நிலையில், சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு உதவித் தொகைக்கான மனு அளித்தேன். மேலும் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுலகத்திலும் மனுக் கொடுத்தேன். </p><p>ஆனால் உதவித் தொகை கிடைக்க வில்லை. பலமுறை நேரில் வந்து கேட்டா லும் தொடர்ந்து அலைக் கழிக்கவே செய் கின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன் என்று வேதனையுடன் தெரிவித்தார்.</p><p> இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.டி.நடராஜன் கூறு கையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுத்த ஏராள மான மாற்றுத் திறனாளிகளுக்கு சுமார் 2 ஆண்டுகளாக உதவித் தொகை வழங் கப்படவில்லை. </p><p>இதேநிலை நீடித்தால் அனைவரையும் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.</p>
