பணிக்குறிப்பு ஊராட்சியில் 100 நாள் வேலை மறுப்பதாக ஆட்சியரிடம் புகார்
25 May 2026, 10:19 pm
<p><strong>பணிக்குறிப்பு ஊராட்சியில் 100 நாள் வேலை மறுப்பதாக ஆட்சியரிடம் புகார்</strong></p><p>விருதுநகர், மே 25- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், பணிக்குறிப்பு ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட் டத்தை தொடர்ந்து செயல் படுத்த வேண்டுமென அப் பகுதியினர் மாவட்ட ஆட்சி யர் சுகபுத்ராவிடம் தெரி வித்தனர். இதுகுறித்து அம்மனு வில் கூறியதாவது: பணிக்குறிப்பு ஊராட்சி யில் முருகையாபுரம், காயாம் பிரம்பு, சொக்கம்பட்டி, பணிக்குறிப்பு ஆகிய கிரா மங்கள் உள்ளன. இங்குள்ள பலருக்கு 100 நாள் வேலை வழங்கப்படவில்லை. வேலைக்கான அடையாள அட்டை கோரி விண்ணப் பித்தவர்களுக்கு அட்டை யும் தரவில்லை. இதுகுறித்து ஊராட்சி செயலர் நடவ டிக்கை எடுக்கவில்லை. எனவே, தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.</p>
