நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியும் ஆத்துமேடு பகுதிக்கு பட்டா வழங்க தாமதம் நடவடிக்கையை விரைவுபடுத்த விருதுநகர் ஆட்சியருக்கு சிபிஎம் கோரிக்கை
11 May 2026, 11:38 pm
<p><strong>நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியும் ஆத்துமேடு பகுதிக்கு பட்டா வழங்க தாமதம் நடவடிக்கையை விரைவுபடுத்த விருதுநகர் ஆட்சியருக்கு சிபிஎம் கோரிக்கை</strong></p><p>விருதுநகர், மே 11- விருதுநகர் நகராட்சி 35 ஆவது வார்டுக்கு உட்பட்ட ஆத்துமேடு பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. </p><p>இதுதொடர்பாக கட்சியின் விருதுநகர் நகர் செயலாளர் எம்.ஜெயபாரத், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். </p><p>அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: விருதுநகர் ஆத்துமேடு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. </p><p>இப்பகுதியில் மக்கள் கடந்த 40 ஆண்டு களுக்கும் மேலாக வீடுகள் கட்டி குடும்பத்து டன் வசித்து வருகின்றனர். </p><p>ஆனால், இக்குடியிருப்புகள் அமைந் துள்ள பகுதி நகராட்சி வரைபடத்தில் “வழித் தடம்” என தவறாக பதிவு செய்யப்பட்டி ருப்பதால், அப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p> இதுகுறித்து கடந்த 2 ஆண்டுகளாக பல முறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. </p><p>இதையடுத்து, கடந்த 2025 ஆகஸ்ட் 25-ஆம் தேதி சாத்தூர் கோட்டாட்சியர் மனு தாரர்களிடம் நேரடி விசாரணை நடத்தி னார். </p><p>அதன் பின்னர், விருதுநகர் நகராட்சி யில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்கு அனுப்பினால், ஆத்து மேடு பகுதிக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.</p><p> அதன்படி, கடந்த 2025 டிசம்பர் 31 ஆம் தேதி விருதுநகர் நகராட்சியில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நகராட்சி ஆணையாளர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. </p><p>எனவே, நீண்டகாலமாக பட்டா இன்றி அவதிப்பட்டு வரும் ஆத்துமேடு பகுதி மக்க ளுக்கு விரைவில் பட்டா வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலி யுறுத்தப்பட்டுள்ளது.</p><p> முன்னதாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து நகர் செயலாளர் எம்.ஜெயபாரத், நகர்மன்ற உறுப்பினர் கே. ஜெயக்குமார் மற்றும் மாதர் சங்க நிர்வாகி ஸ்டெல்லாமேரி ஆகியோர் மனுவை வழங்கினர்.</p>
