விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு!
17 Jun 2026, 1:34 pm
<p>அதிமுக எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததையடுத்து விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சி.விஜயபாஸ்கர், நேற்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி.பிரபாகரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கடிதத்தைப் பெற்றுக்கொண்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகரும், சி. விஜயபாஸ்கரின் ராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.</p><p>முன்னதாக, அதிமுக எம்.எல்.ஏ-களாக இருந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>
