தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒரு வழிச் சாலையில் விதிகளை மீறி பயணம்: பி.என்.சாலையில் விபத்து ஏற்படும் அபாயம்

22 Nov 2025, 3:59 pm
ஒரு வழிச் சாலையில் விதிகளை மீறி பயணம்: பி.என்.சாலையில் விபத்து ஏற்படும் அபாயம்
<p>திருப்பூர், நவ.22 - திருப்பூரின் முக்கிய சாலைகளில் ஒன்றான பி.என்.சாலையில், ஒரு வழிச் சாலை விதிகளை மீறி எதிர்த்திசையில் &nbsp;வாகனங்களை வேகமாக ஓட்டி வருவ தால், விபத்து நேரும் அபாயத்துடன், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகி றது. இதனால், அன்றாடம் அப்பாதை யில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள் ளாகியுள்ளனர். ஒருவழிப் பாதை விதிமீறல்களால் போக்குவரத்து நெரிசல்: திருப்பூர் புதிய பேருந்து நிலை யத்தில் இருந்து பழைய பேருந்து நிலை யம் செல்லும் பி.என்.சாலை, மேட்டுபா ளையம், மில்லர் ஸ்டாப் வழியாக புஷ்பா தியேட்டர் வரை ஒரு வழிச் &nbsp;சாலையாக (ஒன்வே) அமைக்கப்பட் டுள்ளது. அதேபோல், எதிர்த் திசையில் &nbsp;புஷ்பா தியேட்டர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் ராம்நகர் வழியாக அல்லது குமார் நகர், 60 அடி சாலை &nbsp;வழியாக பி.என்.சாலையில் இணைய &nbsp;வேண்டும். ஆனால், வாகனப் போக்கு வரத்து விதிகளை பெரும்பாலான தனி யார் மினி லோடு வாகனங்கள், இருசக் கர வாகனங்கள் கண்டுகொள்வ தில்லை. புதிய பேருந்து நிலையம் நோக்கி விரைந்து செல்வதற்காக, பல &nbsp;வாகனங்கள் மில்லர் நிறுத்தம், லட்சுமி நகர், மேட்டுப்பாளையம் வழியாக ஒரு &nbsp;வழிச் சாலையில் எதிர் திசையில் இருந்து நேரடியாக விரைந்து வருவ தை காண முடிகிறது. இதன் விளை வாக, குறிப்பாக காலை, மாலை நேரங் களில் இச்சாலையில் கடும் போக்குவ ரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், காலை 9 மணிக்கு இந்த வழியாக வந் தால் எதிர் திசையில் இருந்து வரும் பைக்குகள் மற்றும் வாகனகளும் திடீர் &nbsp;என்று முன்னால் இருந்து வந்து கொண்டே இருக்கும். குறுக்கிட்டு வந்து &nbsp;நிறுத்தும். 15 நிமிட பயணம் 30 நிமிட &nbsp;பயணமாக மாறிவிடுகிறது. விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் இந்த சாலை யில் பயணிக்கும் போதெல்லாம் உள் ளது. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது என வாகன &nbsp;ஓட்டி ஒருவர் புலம்பிச் சென்றார். காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை: இது தொடர்பாக, காவல்துறை &nbsp;உடனடியாக தலையிட்டு கண்டிப்பான &nbsp;நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று &nbsp;சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி &nbsp;பொதுமக்கள் &nbsp;கோரிக்கை விடுத்துள்ள னர். ஒரு வழிப்பாதையில் விதிகளை &nbsp;மீறும் வாகனங்கள் மீது கடும் நடவ டிக்கை எடுத்தல், கூடுதலாக போக்கு வரத்துக் காவலர்களை இந்தப் பகுதி யில் நிலையாக நியமிக்க வேண்டும். &nbsp;ஆங்காங்கே ஒரு வழி சாலை குறித்து எச்சரிக்கை தட்டிகள் வைப்பது போன்ற &nbsp;நடவடிக்கைகள் மூலமே இந்தப் பிரச் சனையை தீர்க்க முடியும் என்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை கருத் தில் கொண்டு போக்குவரத்து விதிமீறல் களைக் கட்டுப்படுத்த காவல்துறை உட னடியாக கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.