தென்பெண்ணை ஆற்று குடிநீர் குழாயில் 18 இடங்களில் உடைப்பு: பொதுமக்கள் அவதி
24 May 2026, 2:23 am
<p><strong>தென்பெண்ணை ஆற்று குடிநீர் குழாயில் 18 இடங்களில் உடைப்பு: பொதுமக்கள் அவதி</strong></p><p>விழுப்புரம், மே 22- விழுப்புரம் நகர மக்களுக்குக் குடிநீர் வழங்கும் தென்பெண்ணை ஆற்று ஒட்டுக் குழாயில் 18 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>விழுப்புரம் நகராட்சி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நகரிலி ருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் பாய்ந்தோடும் தென்பெண்ணையாற்றின் ஏனாதிமங்கலம் ஊராட்சிப் பகுதியிலிருந்து விழுப்புரம் நகரத்திற்குப் பெருங்குழாய்கள் அமைக்கப்பட்டுத் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. </p><p>இந்நிலையில், இக்குடிநீர் குழாயில் 18 இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டுத் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.</p><p> இத னால் ஆங்காங்கே தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்பதால், அப்பகுதிகளில் கோரைப்புற்கள் மண்டி வளர்ந்துள்ளன.</p><p>இந்த அவல நிலைக்குத் தீர்வு காண விழுப்புரம் நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இது வரை எந்தவொரு நடவடிக் கையும் எடுக்க வில்லை</p><p>. இது ஒருபுறமிருக்க, இவ்வளவு தண்ணீர் வீணாகக் கசிந்தாலும், நகரிலுள்ள முக்கியப் பிரமு கர்களின் வீடுகளுக்கும், ஒரு சில உணவகங்களுக்கும் தண்ணீர்சென்ற பிறகே, பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் செய்யப்படு வதாகப் பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். </p><p>மேலும், குழாய் உடைப்பால் தேங்கி நிற்கும் அசுத்தமான தண்ணீரே சில நேரங்களில் குடிநீரோடு கலந்து வருவதாகவும், இது குறித்துப் புகார் அளித்தால் நகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் அலட்சியமாக இருப்ப தாகவும் பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர். </p><p>“ஆட்சி மாறினாலும் இந்த அவலக் காட்சி மாற வில்லை; எந்த ஆட்சி வந்தால் இவர்களின் அலட்சியப்போக்கு மாறுமோ தெரியவில்லை” எனப் பொதுமக்கள் தங்களின் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.</p>
