முந்தய பக்கம்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இருளர் பழங்குடியினர் தர்ணா

17 Jun 2026, 1:22 am
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில்  இருளர் பழங்குடியினர் தர்ணா
<p><strong>விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இருளர் பழங்குடியினர் தர்ணா</strong></p><p> விழுப்புரம்,ஜூன் 16-விழுப்புரம் மாவட்டம், அனிச்சம்பாளையம் இருளர் பழங்குடியின மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த டிசம்பரில் மனு அளித்தனர். நிலம் தேர்வு செய்யப்பட்டு விசாரணை அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் காரணம் காட்டி பணி கிடப்பில் போடப்பட்டது.</p><p>தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியரைச் சந்தித்தபோது, மனு தொலைந்துவிட்டதாக அலட்சியமாகக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பழங்குடி</p><p>மக்கள், குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டா வழங்கவும், அலட்சியமாகச் செயல்பட்டஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்திய தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram