கராத்தே போட்டியில் தலைமை காவலர் வெற்றி
15 hours before
<p><strong>கராத்தே போட்டியில் தலைமை காவலர் வெற்றி </strong></p><p>விழுப்புரம்,ஆக.11-தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் அகில இந்திய காவல்துறை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.இதில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் கலந்து கொண்ட வெள்ளிமேடு பேட்டை காவல் நிலைய தலைமை காவலர் வருண்குமார் கராத்தே போட்டியில் மூன்றாம் பரிசு வென்றார். சான்றிதழ் மற்றும் பதக்கத்தை செவ்வாயன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மதிவாணனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.</p>
