மதுபான கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
8 hours before
<p><strong>மதுபான கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்</strong></p><p>திருவண்ணாமலை, ஆக.25-திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பி.எல்.தண்டா பகுதி யில் இயங்கி வரும் அரசு மதுபான கடையைஅகற்றக்கோரி பி.எல்.தண்டா, போயம் பள்ளி தண்டா, அரட்டவாடி, பொரசப் பட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மதுபான கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாச்சல் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்க ளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, கடையை அகற்றுவது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர் இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.</p>
