தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

1 Jun 2026, 8:52 pm
திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்!
<p><strong>திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்! </strong></p><p>சென்னை, ஜூன் 1 - தன்னை சட்டமன்ற உறுப்பின ராக தேர்ந்தெடுத்த திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நன்றி தெரிவித்தார். </p><p>புனித ஜோசப் கல்லூரி மை தானத்தில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத் தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகு தனது உரையை தொடங்கிய முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரி வித்தார்.</p><p> “தமிழ்நாட்டுக்கு திருச்சி எப்படி இதயம் போன்றதோ, அதேபோல் எனக்கு திருச்சி கிழக்கு தொகுதி இதயத்திற்கு நெருக்கமானது” என்று குறிப்பிட்டார். </p><p>6 மாதம் அமைதியாக இருப்போம் என்று கூறியவர்கள் தவெக ஆட்சி அமைந்த 6 நாட்களில் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டதாக கூறிய அவர், தவெக அரசை எவ்வளவு தான் விமர்சித்தாலும், மக்கள் எப்போதும் தவெகவையே ஆதரிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.</p><p>தமிழக அரசியலில் இப்போதும் இரண்டே சக்திகள்தான் உள்ளன என்று கூறிய முதலமைச்சர் விஜய், “திமுக தீய சக்தி மட்டுமல்ல, தூர சக்தியாக வும் மாறிவிட்டது. </p><p>அதிமுக தீர்ந்து போன சக்தியாக மாறிவிட்டது” என்றார். </p><p>தவெக-வை மக்கள் இன்னும் அதிக மாக ஆதரித்திருந்தால் தனி மெஜா ரிட்டியோடு வெற்றி பெற்றிருக்கலாம் என்று குறிப்பிட்டார். தவெக குதிரை பேரம் செய்வதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டை மறுத்த முதலமைச்சர் விஜய், எங்களுக்கு எந்த குதிரை பேரமும் செய்ய வேண்டிய தேவை இல்லை.</p><p>சாதி, மத பேதம் பாராமல் தமிழக மக்கள் வாக்களித்து பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்கள் என்றார். திருச்சி கிழக்கு தொகுதியை தனது செல்லக்குழந்தை என்று வர்ணித்த முதலமைச்சர், விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தவெகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். </p><p>நிகழ்ச்சிகளை நிறைவு செய்த பிறகு முதலமைச்சர் விஜய் இரவே தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்பினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.