நெல்லையில் விஜய்: சாரமில்லா பிரச்சாரம்
9 Apr 2026, 5:30 am
<p><strong>நெல்லையில் விஜய்: சாரமில்லா பிரச்சாரம்</strong></p><p>திருநெல்வேலி விஜய் பிரச்சாரக் கூட்டமும் வழக்கம் போல அமைந்தது. அவருடைய பேச்சில் எந்தப் புதுமையும் இல்லை. திமுக அரசைத் தாக்குவதாகக் கூறி பழைய விஷயங்களையே பேசினார். மக்கள் மத்தியில் இது எடுபடவில்லை.</p><p>திருநெல்வேலியில் வழக்கம் போல முதல்வர் ஸ்டாலின் மீது குறி வைத்தே பேச்சைத் துவங்கினார். ஆனால் ஒரு வித்தியாசமான அவருடைய பிரச்சாரத்தை திமுக அரசு தடுக்கிறது. திமுக அரசு அதிகாரிகள் பிரச்சாரம் செய்வதைத் தடுக்கிறார்கள் என்று விஜய் குற்றம் சாட்டினார். ஆனால் தேர்தல் ஆணையம் தான் பிரச்சாரங்களை முறைப்படுத்துகிறது என்பது அவருக்குத் தெரியவில்லை.</p>
