தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விஜய்பின் கடலூர், குமரி, கும்மிடிப்பூண்டி பரப்புரைக்கு அனுமதி கிடைப்பதில் ரத்து

12 Apr 2026, 5:30 am
விஜய்பின் கடலூர், குமரி, கும்மிடிப்பூண்டி பரப்புரைக்கு அனுமதி கிடைப்பதில் ரத்து
<p><strong>விஜய்பின் கடலூர், குமரி, கும்மிடிப்பூண்டி பரப்புரைக்கு அனுமதி கிடைப்பதில் ரத்து</strong></p><p>சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.19 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கடலூர் பரப்புரை ஏப்.11 ஆம் தேதி இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>விஜய் மார்ச் 30 ஆம் தேதி முதல் பரப்புரையைத் தொடங்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளைத் தொடங்கினார். எனினும் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஏப்.10-ல் மீண்டும் மற்றும் தொடங்கலாம் எனத் திட்டமிட்டனர். ஏப்.10 அன்று கடலூர் பரப்புரை நடத்த காவல்துறை அனுமதி வழங்க மறுத்தது. ஆனால் அதற்குப் பதிலாக ஏப்.11 ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டது.</p><p>இந்நிலையில், ஏப்.11-ம் தேதி (சனிக்கிழமை) அன்று கடலூரில் மீண்டும் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், சென்னையிலிருந்து 170 கிலோமீட்டர் சாலை வழியாக வர வேண்டும் என்பதால், அவரது வாகனத்தை பின் தொடரும் ரசிகர்களால் விபத்துக்கள் நேரிடும் என்ற அச்சம் இருப்பதாகக் கூறப்படுகிறது.</p><p>இதனால் கடலூர் பரப்புரை நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது. ஏப்.12 (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரி, அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியிலும் விஜய் பிரச்சாரத்திற்குத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய நிலையில் இந்த இரண்டு கூட்டங்களையும் வேறொரு தேதிக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.