பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்
19 May 2026, 1:10 am
<p><strong>பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்</strong></p><p>ஒன்றிய அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியதை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன் தொமுச மாவட்ட பொருளாளர் பூ.விஜயகுமார், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சங்கர்மேஸ்திரி, ஐஎன்டியுசி மாவட்ட பொறுப்பாளர் முகமது அலி ஜின்னா, எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் கலைவாணி, ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் எம்.சரோஜா ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர். சகோதர சங்கங்களின் தலைவர்கள் சி.ஞானசேகரன், சி.சரவணன், வெ.கலைநேசன், எல்.மணி, கா.வெ.திருப்பதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.</p>
