தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேளச்சேரி ரயில் நிலையம் அருகே 6 ஏக்கரில் புதிய பேருந்து முனையம்

15 May 2026, 1:03 am
வேளச்சேரி ரயில் நிலையம் அருகே  6 ஏக்கரில் புதிய பேருந்து முனையம்
<p><strong>வேளச்சேரி ரயில் நிலையம் அருகே 6 ஏக்கரில் புதிய பேருந்து முனையம்</strong></p><p>சென்னை, மே 13 - சென்னை மாநகரில் போக்குவரத்து வசதியை விரிவுபடுத்தி மேம்படுத்தும் வகையில், வேளச்சேரி ரயில் நிலையம் அருகே 6 ஏக்கரில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது. </p><p>வணிக வளாகத்துடன் கூடிய இந்த முனையத்தை அமைப்பதற்கான பணி களை தமிழ்நாடு அரசு தொடங்க உள்ளது.</p><p> சென்னை மாநகர போக்கு வரத்து கழகத்தில், தினசரி 700க்கும் மேற்பட்ட வழித் தடங்களில், 3 ஆயிரத்து 454 பேருந்துகள் இயக்கப்படு கிறது. </p><p>சென்னை நகரின் எல்லைகள் விரிவடைந்து வருகிறது. </p><p>மக்கள் பெருக் கம், பயணிகளின் எண்ணி க்கை அதிகரிப்பிற்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க வும், புதிய பணிமனைகளை அமைக்கவும் போக்கு வரத்து கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. </p><p>குறிப்பாக, வேளச் சேரியையொட்டி மடிப் பாக்கம், பெருங்குடி, பள்ளி க்கரணை, உள்ளிட்ட பகுதி கள் பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளன. </p><p>இந்தப் பகுதி களில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படு கிறது. </p><p>மேலும், மெட்ரோ ரயில் திட்டமும் அமல் படுத்தப்பட்டு வருகிறது. </p><p>இதன் தொடரச்சியாக, வேளச்சேரி ரயில் நிலையம் அருகில் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக் கப்பட உள்ளது. </p><p>இந்த இடத்தை, போக்குவரத்து கழக அதிகாரிகள் அண்மை யில் ஆய்வு நடத்தினர்.</p><p> இதுகுறித்து, போக்கு வரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், “சென்னை புற நகர் பகுதியில் குடியிருப் புகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் அதி கரித்து வருகிறது. </p><p>அதன் காரணமாக பேருந்து தேவை அதிகரித்துள்ளது.</p><p> எனவே, கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டி உள்ளது. அதற்கேற்ப பணிமனைகளையும், புதிய பேருந்து நிலையங்க ளையும் அமைக்க வேண்டி உள்ளது. </p><p>பரங்கிமலை -வேளச் சேரி - கடற்கரை மேம்பால ரயில் இணைப்புக்கு பின், ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. </p><p>தினசரி பயணிப் பவர்களின் 75 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை தினசரி அதி கரிக்கும் நிலை ஏற்பட்டுள் ளது. </p><p>தாம்பரம் - வேளச்சேரி - கிண்டியை இணைக்கும் புதிய மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் செயல் படுத்தப்பட உள்ளது. </p><p>இவற்றை கருத்தில் கொண்டு ரயில் நிலையம் அருகே கழகத்துக்கு சொந்த மான 6 ஏக்கர் நிலத்தில் வணிக வளாகத்துடன் வடிய புதிய பேருந்து முனையம் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் விரைவில் நடத்தப்படும். </p><p>அதன்பின், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதை தமிழக அரசிடம் சமர்ப் பித்து ஒப்புதல் பெறப்படும்.</p><p> இந்த பேருந்து முனை யத்தில் டீசல் பேருந்துகள், மின்சார பேருந்துகள் நிறுத் துவதற்கான வசதி செய்யப் படும்.</p><p> வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு அம்சங் களும் இடம் பெறும். </p><p>சென்னையில் தனியார் சிற்று ந்துகள் இயக்கத்தை விரிவு படுத்தும் திட்டத்தின் கீழ், வேளச்சேரியில் இருந்து கீழ்க்கட்டளை, மடிப் பாக்கம், மேடவாக்கத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் இணைக்கப்பட உள்ளன. </p><p>தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், ஐ.டி., நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் சோழிங்கநல் லுாரையும் இணைக்கும் முக்கிய மையமாக வேளச் சேரி உள்ளதால், பேருந்து களின் இயக்கத்தை அதி கரிக்க பேருந்து நிலையம் உதவும்.</p><p> பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலுார், சிதம்பரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்க ளுக்கு செல்லும் பேருந்து களையும் இந்த முனையத் திலிருந்து இயக்க நட வடிக்கை எடுக்கப்படும். </p><p>பண்டிகை, விடுமுறை, விழாக்கள் போன்ற நிகழ்வு காலங்களில் ஜி.எஸ்.டி., சாலையில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசல் பயணத் திற்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், பயணிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளா கின்றனர். </p><p>எனவே, பண்டிகை</p><p> கால ங்களில் வெளி மாவட்டங் களுக்கு செல்லும் பேருந்து களை, வேளச்சேரி முனை யத்தில் இருந்து இயக்கவும் ஆலோசிக்கப்படும். </p><p>இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்தால், வேளச் ச்சேரி புதிய பேருந்து நிலை யம் ஒருங்கிணைந்த முனை யமாக மாறும். </p><p>இவை யெல்லாம் நிகழும்போது வேளச்சேரி பேருந்து முனை யம் முக்கியத்துவம் வாய்ந்த தாக மாறும்” என்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.