வேளச்சேரி தொகுதி வேட்பாளர் ஜே.எம்.ஏ.அசன் மௌலானா உறுதி
10 Apr 2026, 5:30 am
<p><strong>வேளச்சேரி தொகுதி வேட்பாளர் ஜே.எம்.ஏ.அசன் மௌலானா உறுதி</strong></p><p>சென்னை, ஏப். 9- வேளச்சேரியை வேளச்சேரியாக மாற்றுவோம். எனவே, மக்கள் அமோக வெற்றியை தருவார்கள் என்று வேளச்சேரி தொகுதி வேட்பாளர் ஜே.எம்.ஏ.அசன் மௌலானா கூறினார்.</p><p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜே.எம்.ஏ.அசன் மௌலானா இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இதனையொட்டி 175வது வட்டம் வேளச்சேரி பெரியார் நகரில் இருந்து வாக்கு சேகரிப்பை புதனன்று (ஏப்.8) தொடங்கினார்.</p><p>இந்த வாக்கு சேகரிப்பை தொடங்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். வேளச்சேரி தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் செய்துள்ள வளர்ச்சிப்பணிகளை கூறினார். அடுத்து அமையும் திமுக செய்ய உள்ளவற்றை கூறியும் வாக்கு கேட்டார்.</p><p>வேட்பாளர் அசன் மௌலானா கூறுகையில், “தமிழக அரசின் ஒத்துழைப்போடு வேளச்சேரியாக இருந்த இடங்களையெல்லாம் வேளச்சேரியாக மாற்றி அமைத்துள்ளோம். அடுத்து அமையும் திமுக அரசு ஏராளமான திட்டங்களை மக்களுக்கு கொண்டு வர உள்ளது.</p><p>பூமிக்கு மேல் கம்பிகள் வழியாக செல்லும் மின் கம்பிகளை புதைவடமாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. 2100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் 4 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.</p><p>இதுபோன்ற வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளதால் மக்கள் அமோக வரவேற்பளிக்கின்றனர். எனக்கு மட்டுமின்றி, கூட்டணிக்கும் மக்கள் அமோக வெற்றியை தருவார்கள்” என்றார்.</p><p>இந்த வாக்கு சேகரிப்பில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ்.முகமதுஅலி, திமுக பகுதிச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
