வனப்பேச்சிக்கு ஈரோட்டில் உற்சாக வரவேற்பு
15 Mar 2026, 4:11 pm
<p><strong>வனப்பேச்சிக்கு ஈரோட்டில் உற்சாக வரவேற்பு</strong></p>
<p>ஈரோடு, மார்ச் 15- வனப்பேச்சி என்னும் பேரண்டச்சி நாடகத்திற்கு ஈரோட்டில் உற்சாக வரவேற் பளிக்கப்பட்டது. ஈரோடு கொங்கு கலை யரங்கில் ஈரோடு நாடகக் கொட்டகை மற்றும் சென்னைக் கலைக்குழு இணைந்து வழங்கிய வனப்பேச்சி என்கிற பேரண்டச்சி நாடகம் சனியன்று மாலை அரங் கேறியது. இந்நிகழ்விற்கு, மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பிரளயன் இயக் கிய நாடகத்தில் திரைக்கலைஞரும், தமுஎகச மதிப்புறுத் தலைவருமான ரோகினி முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்தார். அக்னி ஸ்டீல்ஸ் நிர்வாக இயக்குநர் தங்கவேல் முன்னிலை வகித்தார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், எழுத்தாளர் நக்கீரன், பழங்குடி சங்கத் தலை வர் வி.பி.குணசேகரன், சென்னை சில்க்ஸ் நிறுவனத் தலைவர் விநாயகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமுஎகச மாவட்டச் செய லாளர் இ.கலைக்கோவன் தொகுத்து வழங்கி னார். நாடக அரங்கம் நிரம்பியதைத் தொடர்ந்து, வெளியில் அமைக்கப்பட்டிருந்த திரையில் ஏராளமானோர் கண்டு களித்த னர்.</p>
