சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
9 Apr 2026, 5:30 am
<p><strong>சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி தீவிரம்</strong></p><p>மானாமதுரை, ஏப்.8- மானாமதுரையில் நடைபெற உள்ள சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிரே உள்ள வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.</p><p>மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன்-சோமநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 10 நாள் சித்திரை திருவிழா, இந்த ஆண்டு வருகிற ஏப். 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கூடுகின்றனர்.</p><p>தற்போது வைகை ஆற்றில் நாணல் செடிகள், கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகம் சுத்தப்படுத்தும் பணியை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.</p><p>நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடைபெறும் இந்த பணிகள், திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான சூழலை உருவாக்கும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன.</p>
