சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
9 Apr 2026, 5:30 am
<p><strong>சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி தீவிரம்</strong></p><p>மானாமதுரை, ஏப்.8- மானாமதுரையில் நடைபெற உள்ள சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிரே உள்ள வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.</p><p>மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன்-சோமநாதர் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்குகிறது. திருவிழா காலங்களில் வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், ஆற்றில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றும் பணி நடைபெறுகிறது.</p><p>நகரமன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடைபெறும் இந்தப் பணிகள், பக்தர்களுக்கு சுத்தமான சூழலை உருவாக்கும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன.</p>
