2 மாதத்திற்குள் வைகை அணை தூர்வாரும் பணி தொடங்கும்! அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தகவல்
13 Jun 2026, 11:10 pm
<p><strong>2 மாதத்திற்குள் வைகை அணை தூர்வாரும் பணி தொடங்கும்! அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தகவல்</strong></p><p>தேனி, ஜூன் 13 - வைகை அணையைத் தூர்வாரும் பணி 2 மாதங்களுக்குள் முழுவீச்சில் தொடங்கும் என்று எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார். </p><p>சனிக்கிழமை (ஜூன் 13) தேனி மாவட்டத் திற்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்ட அமைச் சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், வைகை அணைப்பகுதியை நேரில் ஆய்வு செய் தார். </p><p>பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறு கையில், “வைகை அணையில் சுமார் 15 அடி வரை தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றித் தூர்வாரும் பணிகளை மேற்கொள் வதற்கான ஆய்வு அறிக்கைகள் தயாரிக்கப் பட்டு வருகின்றன. </p><p>இந்தப் பணி மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளதுடன், முழுமையாக நிறைவேற சுமார் 9 ஆண்டு கள் ஆகும். </p><p>இது தொடர்பாக ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் அனுமதி பெறுவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. </p><p>அனுமதி கிடைத்தவுடன், இன்னும் 2 மாதங்களுக் குள் தூர்வாரும் பணி முழுவீச்சில் தொடங்கப் படும். மேலும், விவசாயிகள் தங்கள் தேவை களுக்காக வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. </p><p>ஆனால், வணிக நோக்கத்திற் காகவோ அல்லது சட்டவிரோதமாக கடத்த முயற்சித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அ</p><p>தேபோல், ஆண்டிபட்டி புறவழிச்சாலைத் திட்டத்தை செயல் படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் அமைச்சர் தலைமையில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது.</p>
