வடிகெட்டியந்தல் பள்ளியில் முதல் நாள் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!
5 Jun 2026, 3:14 am
<p><strong>வடிகெட்டியந்தல் பள்ளியில் முதல் நாள் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!</strong></p><p>சங்கராபுரம், ஜூன் 4- கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு, வடசெட்டியந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாண வர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலர் சீனிவாசன் நேரில் கலந்து கொண்டு, மாணவர்களுக்குப் பூங்கொத்து மற்றும் பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். குறிப்பாக, முதன்முறையாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த குழந்தைகளின் பயத்தைப் போக்கும் விதமாக ஆசிரியர்கள் அவர்களை அன்புடன் வரவேற்றனர். தலைமை ஆசிரியர் லட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பள்ளி மேலாண்மைக் குழு வினர், முன்னாள் மாணவர் கேசவ கந்தசாமி மற்றும் காலை உணவுத் திட்டப் பணி யாளர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்தினர். ஆசிரி யர்கள் அர்ப்பணிப்புடன் பணி யாற்றுவர் எனத் தலைமை ஆசிரியர் உறுதியளித்தார்.</p>
