‘ஊரும் உலகமும்’ நூல் வெளியீட்டு விழா
18 Feb 2026, 3:04 pm
<p><strong> ‘ஊரும் உலகமும்’ நூல் வெளியீட்டு விழா</strong></p>
<p>புலவர் உதயை மு.வீரையன் எழுதி மணிவாசகர் பதிப்பகம் பதித்துள்ள ‘ஊரும் உலகமும்’ எனும் நூல் வெளியீட்டு விழா செவ்வாயன்று (பிப்.17) சென்னை ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெற்றது. இந்நூலை ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் வெளியிட முனைவர் பா.பெருமாள், புலவர் இரத்தினவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நூலை கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அறிமுகம் செய்தார். சிபிஐ முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கருத்துரையாற்றினார். நூலாசிரியர் உதயை மு.வீரையன் ஏற்புரையாற்றினார். புலவர் பு.சீ.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.</p>
